உள்நாடு

இசை நிகழ்ச்சியில் 31 இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது

மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 31 இளைஞர், யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிம்புலாவல கமதா என்ற இடத்தில் நேற்று (01) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியைப் பார்க்க வந்த இளைஞர்கள் குழுவொன்றே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

500க்கும் மேற்பட்டோர் இசை நிகழ்ச்சிக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மிரிஹான குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 31 இளைஞர்களிடம் இருந்து பல்வேறு வகையான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறு செய்துவிட்டார் – சரத் வீரசேகர.

பல்கலைக்கழக புலமைப்பரிசில் வங்கிக்கணக்குகளில் வைப்பு

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றம் ஒத்திவைப்பு