உள்நாடு

அவுஸ்திரேலியாவில் இருந்த 50 பேர் நாட்டுக்கு

(UTV|கொழும்பு)- அவுஸ்திரேலியாவில் இருந்த 50 இலங்கையர் இன்று(21) நாடு திரும்பியுள்ளனர்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, நாடு திரும்ப முடியாத நிலையில் மாலைத்தீவில் இருந்த 255 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலன்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் – 102 எனும் சிறப்பு விமானம் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்கள் தற்காலிக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தகவல் தொழிநுட்ப சங்க தலைவர் ரஜீவ் மத்தியு கைது

சவுதி அரேபியாவிற்கு இலங்கையின் புதிய தூதுவராக சட்டத்தரணி அமீர் அஜ்வத் : கௌரவிக்கும் மீடியா போரம்

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கை உயர் கல்வித் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்