அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், சிறிய ரக வேன் ஒன்று ரயிலுடன் மோதி இன்று (09 ) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்து, அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மருதானையிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன் வேன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில், வேனை செலுத்திய பெண் ஒருவர் காயமடைந்து, உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.