உள்நாடுபிராந்தியம்

அறுகம்பை குடாவில் அதிகரித்துள்ள உல்லாசப் பயணிகளின் வருகை

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறுகம்பைக் குடாவுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான உல்லாசப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

சர்வதேச ரீதியில் நீரலைச் சறுக்கல் விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற அறுகம்பைக்குடாவில் அதிகாரித்த உல்லாசப் பயணிகளின் வருகையையடுத்து பொத்துவில், உல்ல, அறுகம்பை போன்ற பிரதேசங்களில் வியாபாரமும் களைகட்டியுள்ளது.

அறுகம்பைக்கு உள்ளூர் உல்லாசப் பயணிகளும் தினசரி வருகைதருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசபந்து தென்னகோனை கைது செய்ய பொலிஸ் குழுக்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

குழந்தைகள் மத்தியில் உயிராபத்துமிக்க ‘மிஸ்ஸி’

கோழி இறைச்சி விற்பனையில் பாரிய மாற்றம்

editor