உள்நாடு

அருந்தித பதவி விலக வேண்டும் : மருத்துவபீட மாணவ பெற்றோர் சங்கம் கோரிக்கை

(UTV | கொழும்பு) – ராகமவில் உள்ள களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தனது இராஜாங்க அமைச்சர் பதவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அரசாங்க மருத்துவபீட மாணவ பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

பகிடிவதை சம்பவமே மோதலுக்கு வழிவகுத்தது என அருந்திக பெர்னாண்டோ கூறியது தவறானது என்றும், இது கடத்தல் முயற்சி தோல்வியடைந்தது என்றும் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வசந்த அல்விஸ் தெரிவித்துள்ளார்.

அருந்திக பெர்னாண்டோ பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறிய அல்விஸ், சம்பவத்தை மூடி மறைக்க முயன்றதாக குற்றம் சாட்டி தற்காலிகமாக பதவி விலகியுள்ளதாகவும், அருந்திகவின் மகனும் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அல்விஸ் தெரிவித்துள்ளார்.

பெர்னாண்டோ தனது மகன் கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்கு முன் பாசாங்குகளை முன்வைத்ததாகவும், சட்டம் அமுல்படுத்தப்பட்டபோது, மற்றொரு முகமூடியை அணிந்து கொண்டு தனது இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து தற்காலிகமாக இராஜினாமா செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 38 கோப்புகள் பதில் பொலிஸ்மா அதிபருக்கு

கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ளன – அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? சஜித் பிரேமதாச கேள்வி

editor

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!