முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அரபுக் கல்லூரிகளுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல் தற்போது நாட்டின் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்றது.
எனவே இந்த அபாயகரமான நிலைமையைக் கருத்திற்கொண்டு அனைத்து அரபுக் கல்லூரிகளும் தங்களது மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவதாயின் பாதுகாப்பான முறையில் அவர்களை பாதுகாவளர்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
