உள்நாடு

அரசிலிருந்து விலகிய SLFP உறுப்பினர்கள் விபரம்

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுயாதீனமாக செயற்படுவதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

இதன்படி தானும் ஏனைய 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக செயற்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிமல் சிறிபால டி சில்வா
மஹிந்த அமரவீர
தயாசிறி ஜயசேகர
துமிந்த திசாநாயக்க
லசந்த அழகியவன்ன
ரஞ்சித் சியம்பலாபிட்டிய
ஜகத் புஷ்பகுமார
ஷான் விஜயலால் டி சில்வா
சாந்த பண்டார
துஷ்மந்த மித்ரபால
சுரேன் ராகவன்
அங்கஜன் ராமநாதன்
சம்பத் தசநாயக்க

தற்போது பொதுஜன பெரமுனவின் 12 உறுப்பினர்களும், விமல் வீரவன்ச உட்பட 16 உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எஸ்.எம்.எம்.முஷாரப் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

Related posts

சிறைச்சாலைகளில் செனிடைசர் திரவங்களுக்கு தடை

புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் களுத்துறை முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு முதலிடம்

IMF அவசர உதவி ஒதுக்கீடுகளை அதிகரிப்பதில் கவனம்