உள்நாடு

அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTVNEWS | COLOMBO) – புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ´பலமானதொரு அரசு – எமது அரசியலமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள்´ என்ற கருப்பொருளின் கீழ் ´யுத்துகம´ அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அவ் அமைப்பின் தலைவர் கெவிது குமாரதுங்க ஜனாதிபதியிடம் அம்முன்மொழிவுகளை கையளித்தார்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக தேசியப்பட்டியல் எம்.பி கிடைக்கும் – ரிஷாட் எம்.பி நம்பிக்கை!

editor

இன்று இரவு மின்வெட்டு இல்லை

மூன்றாவது தடுப்பூசியாக பைசர்