அரசியல்உள்நாடு

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கையில் மட்டுப்பாடு

தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உதவிக்காக நியமிக்கப்படக்கூடிய அதிகபட்ச ஊழியர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமைச்சர்களுக்கான உதவி ஊழியர்கள் அதிகபட்சமாக 15 பேருக்கு உட்பட்டவர்கள் என்பதோடு, பிரதி அமைச்சர்களுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கை 12 பேருக்கு மேற்படாத வகையில் காணப்பட வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் கடமைகளை மிகவும் திறமையாக மற்றும் அனைத்து தரப்பினருடனும் நல்ல ஒருங்கிணைப்புடன் பணிகளை முன்னெடுத்துச் செல்ல இந்த உதவி ஊழியர்களை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் ஊழியர்களின் எண்ணிக்கையானது அதிகபட்ச எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கக்கூடாது என்று ஜனாதிபதி செயலாளர் என்.எஸ் குமாநாயக்க அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Related posts

கடன்களை செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு – ஜனாதிபதி

அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியின் அசாதாரண திறமை

editor

சமூகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது