விளையாட்டு

அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும்-தெற்கு அபிவிருத்தி அமைச்சு

(UTV|GALLE)-காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தாமல் விடுவது குறித்து தற்போது வரை தீர்மானிக்கப்பட வில்லை என தெற்கு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

யுனெஸ்கோ அமைப்பினால் உலக மரபுரிமையாக பெயரிடப்பட்டுள்ள காலி கோட்டைக்கு அருகில் இந்த கிரிக்கட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

பொறுப்புவாய்ந்த நிறுவனங்களில் அனுமதி இன்றியே அதன் நிர்மாணம் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், விளையாட்டு மைதானத்தை பயன்படுத்தாமல் விடுவது குறித்து அமைச்சரவையே தீர்மானிக்க வேண்டும் என தெற்கு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

2019 உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது ​மேற்கிந்தியத் தீவுகள் அணி

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் சங்கக்கார

LPL தொடரின் ஆரம்பப் நிகழ்வுகள் இன்று