உலகம்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவானது.

உள்ளூர் நேர்ப்படி காலை 10:08 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மலை நகரமான ஜூலியனில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சான் டியாகோ கவுண்டியில் மையம் கொண்டிருந்தது.

இது சுமார் 193 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை வடக்கே உணரப்பட்டது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல
பின்அதிர்வுகள் ஏற்பட்டன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

சான் டியாகோவிற்கு வெளியே உள்ள கிராமப்புற சாலைகளில் பாறைகள் சரிந்து விழுந்தன.

நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

இத்தாலி உயிர்த்த ஞாயிறு தினம் வரை முடக்கப்படும்

மலேஷியாவில் போதைப்பொருளுடன் இலங்கையர் கைது!

editor

மெக்ஸிகோவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு