உள்நாடு

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது

(UTV|கொழும்பு)- அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் சற்று முன்னர் இந்து சமய முறைப்படி இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் மாரடைப்பு காரணமாக கடந்த 26 ஆம் திகதி காலமானார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் மைதானத்தில் இடம்பெற்றன.

Related posts

பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள்

பலத்த மழை காரணமாக இரண்டு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

editor

இன்று முதல் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

editor