அரசியல்உள்நாடு

அனைத்து சபைகளிலும் அதிக ஆசனங்களை கைப்பற்றுவோம் – ரிஷாட் எம்.பி

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு வரும் நிலையில், அனைத்து சபைகளிலும் அதிகூடிய ஆசனங்களைப் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளதென முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தினமான இன்று (06) மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலயத்தில் தனது வாக்கினை செலுத்திய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளிலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு வரும் நிலையில் அனைத்து சபைகளிலும் அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுக்கொள்வோம்.

மன்னார் மாவட்டத்தில் இம்முறையும் சுமுகமான முறையில் வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வருவகின்றன.

அதேவேளை தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் யாருடன் இணைந்து ஆட்சி அமைப்பது அல்லது யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கவுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

Related posts

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை – மௌனம் கலைக்க போகும் சபாநாயகர்

editor

கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் கைது

கடந்த இரண்டு தசாப்தங்களாக, பல நல்ல பணிகளை செய்திருக்கின்றோம் – ரிஷாட்

editor