வகைப்படுத்தப்படாத

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம்…

(UTV|ANDAMAN) அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை அடுத்தடுத்து 2 மணி நேரத்தில் 9 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந் நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின.

இன்று அதிகாலை 5.14 மணிக்கு 4.9 ரிச்டர் அளவுகோளில் முதல் நிலநடுக்கம் உண்டானது.

இதைத் தொடர்ந்து அடுத்த 2 மணி நேரத்தில் 4.7 ரிச்டர் அளவுகோளில் தொடங்கி 5.2 ரிக்டர் அளவுகோள் வரை 8 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வியல் மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பப்புவா நியூ கினியாவில் பாரிய நிலநடுக்கம்

தைவானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

“Defence forces worked to prevent any more attacks” – Sec. Def. Shantha Kottegoda