அநுராதபுரம் – புத்தளம் வீதியில் கலாவெவ பாலத்தின் மேல் 70 பயணிகளுடன் பேருந்து ஒன்று சிக்கியுள்ளது.
இந்த பேருந்து சுமார் ஒன்றரை மணி நேரமாக அதே இடத்தில் நிற்பதாக இன்று (28) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பின்வருமாறு குறிப்பிட்டார்:
“அவர் சொன்ன அநுராதபுரம் சம்பவம் சரிதான். அந்த பஸ்ஸிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தும், எனவே சிக்கியுள்ளது.
அங்கு 60 பேர் இருப்பதாகவே தகவல் கிடைத்துள்ளது.
தற்போது 2 இராணுவப் பிரிவுகள் களத்தில் செயற்படுகின்றன. அத்துடன், ஒரு ஹெலிகொப்டரை அழைக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.” என்றார்.
