உள்நாடு

அதிக விலையில் பாணை விற்பனை செய்தால் சட்டநடவடிக்கை.

450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறைக்கப்பட்ட புதிய விலையில் பாணை விற்பனை செய்யாது அதிக விலைக்கு விற்பனை செய்யும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சோதனைகளை மேற்கொள்ளுமாறு  நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் டி.ஐ. உடுவார  புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சட்டப்படியான எடை மற்றும் அளவிடும் கருவிகள் மீதான சோதனையின் போது 210 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட உதவி அளவீட்டு அலகு தர நிர்ணய சேவை அத்தியட்சகர் தில்ருக் பட்டியாபொல தெரிவித்துள்ளார்.

Related posts

ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகம் வந்தன

தேசபந்து தென்னகோனின் ரிட் மனு தொடர்பில் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்

editor

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய கட்சி

editor