உள்நாடு

அங்கொட லொக்காவின் மற்றுமொரு சகா பலி

(UTV | கொழும்பு) – உயிரிழந்ததாக கூறப்படும் பிரபல பாதாள உலகின் குழுத் தலைவன் அங்கொட லொக்காவுடைய குழுவின் மற்றுமொரு சகாவான´சமியா´ என்ற சமிந்த எதிரிசூரிய பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூடு கம்பஹா பகுதியில் வைத்து குறித்த நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர், ´சொல்டா´ என்ற அசித ஹேமதிலக என்ற அங்கொட லொக்காவுடைய குழுவின் பிரதான சகா பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

“தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்” ஹஜ் வாழ்த்தில் ஜனாதிபதி ரணில்

ஷானி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

மேலும் 339 பேர் கொவிட் தொற்றிலிருந்து மீண்டனர்