உள்நாடு

அங்குலான பதற்ற நிலை சம்பவம் தொடர்பில் 14 பேர் கைது

(UTV | கொழும்பு) – அங்குலானை காவல் நிலையத்திற்கு முன்பாக ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 10ம் திகதி மொரட்டுவை – லுனாவ பாலத்திற்கு அருகில் காவல்துறையினரின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாக காவல்துறை உத்தியோகத்தர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று(16) அங்குலானை காவல்நிலையத்திற்கு முன்பாக குழு ஒன்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்து செயற்பட்டபோது பதற்ற நிலை ஏற்பட்டதுடன், காவல்துறையினர் மீது கல்வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டது.

நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு காவல்துறையினரால் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தேர்ந்தெடுத்தலில் போராட்டக்காரர்களின் நிபந்தனை

இயக்கச்சி வெடிப்பு சம்பவம் – காயமடைந்த நபர் உயிரிழப்பு

2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 800,000 கடந்தது

editor