வணிகம்

WhatsApp செயலி பாவனையாளர்கள் கவனத்திற்கு

(UTV|COLOMBO) – 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து சுமார் கோடிக்கணக்கான ஸ்மார்ட்போன்களில் வட்ஸ்அப் (WhatsApp) செயலி இயங்காது என அதிர்ச்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் கைப்பேசிகள், 2.3.7 அல்லது அதை விடவும் பழைமையான Android மென்பொருளில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் WhatsApp கிடைக்காது. அதே போன்று விண்டோஸ் கைப்பேசிகளில் வரும் 31 ஆம் திகதிக்குப் பிறகு வட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாது.

இந்த வகை போன்களை வைத்துள்ளவர்களால் புதிய வட்ஸ்அப் கணக்குகளை துவக்கவோ, பழைய கணக்குகளை புதுப்பிக்கவோ முடியாத வகையில் ஏற்கனவே தொழில்நுட்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Related posts

மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகளும் உயர்வு

பால் மாவுக்கான விலைகள் குறைப்பு

கடல் வளத்துறையை கட்டியெழுப்ப திட்டம்