உள்நாடு

UPDATE : கருணா இதுவரையில் CID இல் முன்னிலையாகவில்லை

(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் வாக்குமூலம் ஒன்றினை வழங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இதுவரையில் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்த காலகட்டத்தில் ஆனையிறவு பகுதியில் ஒரே இரவில் தாம் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் வரையிலான இராணுவ வீரர்களை கொன்றொழித்துள்ளதாக கருணா அம்மான் சமீபத்தில் அம்பாறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் சர்ச்சைமிக்க கருத்தினை வெளியிட்டிருந்தமை தொடர்பில் இவருக்கு நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அழைப்புக்கு ஏற்ப முன்னாள் பிரதி அமைச்சர் இன்றைய தினம் காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முன்னிலையாவதாக அறிவித்திருந்த போதிலும் இதுவரையில் அவர் முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பூஸ்டர் செலுத்தியோருக்கு மாத்திரமே கச்ச தீவு செல்ல அனுமதி

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

படகு தொழிற்சாலை தீ கட்டுப்பாட்டுக்குள்