உள்நாடு

Update – போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விளக்கமறியலில்!

(UTV | கொழும்பு) –

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ இன்று காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இன்று காலை கைது செய்யப்பட்ட அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது அவரை இம்மாதம் 13 திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

 

இன்று (01) இரண்டாவது நாளாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்த நிலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

பௌத்தம் உள்ளிட்ட மதங்களை இழிவுபடுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

O/L பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

சனல் 4 ஊடகம் உண்மையை வெளிப்படுத்துமா – ரொஹான் குணரத்ன!

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; பலியானோர் 318 ஆக அதிகரிப்பு