விளையாட்டு

SSC கழகத்தின் தலைவராக மஹேல நியமனம்

(UTV| கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன சிங்களீஸ் விளையாட்டுக் கழகத்தின்(SSC) கிரிக்கெட் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற சிங்களீஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போதே மகேல ஜெயவர்தனவை தலைவராக நியமிக்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 12 வருடங்களாக SSC விளையாட்டு கழகத்தின் தலைவராக செயற்பட்ட சமந்த தொடன்வல, கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகளை இளம் தலைவர் ஒருவர் முன்னெடுக்க இடமளிக்கும் நோக்கில் பதவியில் இருந்து விலகினார்.

Related posts

தோல்விக்கான காரணத்தினை விளக்கினார் தனஞ்சய

தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி இலக்காக 331 ஓட்டங்கள்

அடுத்த வாரம் முதல் ரக்பி லீக் போட்டிகள் நடைபெறும்