கிசு கிசு

SLPP மூவருக்கு அமைச்சு பதவி

(UTV | கொழும்பு) –  ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மூவருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி எஸ். பி திஸாநாயக்க, டிலான் பெரேரா, மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கு புத்தாண்டுக்கு பிறகு அமைச்சரவை அமைச்சு பதவி அல்லது இராஜாங்க அமைச்சு பதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், பொதுஜன பெரமுனவின் பங்காளி கட்சிகளுக்கும் இடையில் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ள நிலையில் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரோ, எஸ். பி .திஸாநாயக்க மற்றும் அனுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோர் 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இணைந்துக் கொண்டவர்கள் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 52 நாள் இடைக்கால அரசாங்கத்தில் அவர்களுக்கு அமைச்சவை மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை வெளிநாடுகளுக்கு செல்லத் தடை

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

உலக புகழ்பெற்ற தொழிலதிபரால் வெறும் 100 மணி நேரத்துக்குள் கொரோனாவை எரிக்கும் திட்டம்