உள்நாடு

SLFP கோரிக்கையும்; விமல், கம்மன்பில, வாசுவின் தீர்மானமும்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இம்முறை சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எதிர்வரும் திங்கள் அன்று விசேட ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்படும் என உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.

எனினும் குறித்த மாநாட்டில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரது கட்சிகளின் யோசனைகளும் பரிந்துரைகளும் கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் ஊடாக முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

2014 பின் முதல் முறையாக ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை $100 தாண்டியது

பல்கலைக்கழக மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் கைது!

editor

சம்பளம் வழங்க பணமில்லை : அரச கூட்டுத்தாபன காணியை விற்க தீர்மானம்