உள்நாடு

QR குறியீடு முறைமை மேலும் தாமதமாகிறது

(UTV | கொழும்பு) – தேசிய எரிபொருள் உரிமம் அல்லது QR குறியீட்டு முறைமையின் கீழ் இன்று முதல் அமுல்படுத்தப்படவிருந்த நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோக திட்டம் பிற்போடப்பட்டுள்ளது.

முன்னோடித் திட்டமாக இன்று பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்தி முன்னோடித் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

QR குறியீட்டு முறையின் கீழ் நாடு முழுவதும் எரிபொருள் வழங்குவதைத் தொடங்க இன்னும் சில நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இனங்காணப்பட்ட சில பிழைகளைத் தீர்த்து நாடளாவிய ரீதியில் பல அதிகார வரம்புகளின் கீழ் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தானினால் உதவி

வுஹானில் உள்ள இலங்கை மாணவர்கள் வந்த சிறப்பு விமானம் மத்தளைக்கு

இருப்பது போதாதா ? புதிய வரிகளை விதித்து ஏன் மக்களை நெருக்கடிக்குள் தள்ளுகிறீர்கள் ? சஜித் பிரேமதாச கேள்வி

editor