அரசியல்உள்நாடு

NPP பெண் எம்.பியிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய SJB எம்.பி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன, ஆளும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திரவிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

பாராளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவமொன்று தொடர்பில் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தின் போது தாம் வெளியிட்ட கருத்து பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலியை தனிப்பட்ட ரீதியில் இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததாக தென்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தாம் கொள்கை ரீதியாக கௌரவமான அரசியலில் ஈடுபடும் ஓர் நபர் என்ற வகையில் எதிர்த்தரப்புக்களுடனான மோதல்கள் கொள்கை சார்பானதே தவிர தனிப்பட்ட ரீதியானதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த போது தமது ஒலிவாங்கியை இடைநிறுத்தியமை மற்றும் நாடாளுமன்ற மரபுகளுக்கு புறம்பான கேள்வி எழுப்பியமை ஆகிய காரணிகளினால் ஆத்திரமுற்று வெளியிட்ட வார்த்தைக்காக மன்னிப்பு கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமது கருத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலிக்கு ஏதேனும் மன கஸ்டங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பு!

மதுபானம் வாங்க சென்றவர் சடலமாக மீட்பு – மற்றொருவர் மாயம்.

பிறந்தநாளுக்கு வாங்கிச்சென்ற ஐசிங் கேக்கில் இறந்த பல்லி – 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் – இலங்கையில் அதிர்ச்சி சம்பவம்

editor