உள்நாடு

MV X-Press Pearl : பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கல் இன்று

(UTV | கொழும்பு) – கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் MV X-Press Pearl கப்பலினால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று (15) ஆரம்பமாகின்றது.

9,883 மீனவக் குடும்பங்களுக்கு இந்த இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல, கட்டான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மீனவக் குடும்பங்களுக்காக 5,000 ரூபா இழப்பீட்டை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் 6,042 குடும்பங்களும் வத்தளையில் 1,409 குடும்பங்களும் கட்டானையில் 233 குடும்பங்களும் ஜா-எலயில் 69 குடும்பங்களும் இந்த இழப்பீட்டுத் தொகையை பெறவுள்ளனர்.

இதற்காக 50 மில்லியன் ரூபா நிதி தமக்கு கிடைத்துள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரணில் நாட்டை புதிய பிரச்சினையில் சிக்க வைத்துள்ளார் – சஜித்

editor

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கோப் குழு அதிகாரிகள் நேரடி விஜயம்

editor

மன்னர் சல்மானிடமிருந்து இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

editor