அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

”என் கனவர் அப்பாவி, இது அனுர அரசின் அரசியல் தாக்குதல்” மஹிந்தானந்தாவின் மனைவி கடிதம்

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்காமகேவின் மனைவி செனானி ஜயரத்ன, கணவருக்கு ஆதரவாக பகிரங்கமாக குரல் கொடுத்தார்

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்காமகேவின் மனைவியும், மறைந்த பிரதமர் டி.எம். ஜயரத்னவின் மகளுமான செனானி ஜயரத்ன, தனது கணவர் மீதான ஊழல் வழக்கு தீர்ப்பை அரசியல் பழிவாங்கல் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

அளுத்காமகேவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட நீண்ட பதிவு ஒன்றில்,

செனானி ஜயரத்ன தனது கணவர் நிரபராதி என்றும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் நடந்த சட்ட நடவடிக்கைகள் அரசியல் தாக்குதலால் பாதிக்கப்பட்டவை என்றும் தெரிவித்தார்.

மேலும், நீதி அமைச்சரின் சமீபத்திய கருத்து ஒன்றை மறைமுகமாக விமர்சித்த அவர், NPP ஆட்சியில் இல்லாவிட்டால் இத்தகைய தீர்ப்பு வழங்கப்படாதிருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் தனது கணவர் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளையும், தனிப்பட்ட தாக்குதல்களையும் பரப்புவோரை செனானி கடுமையாக விமர்சித்தார்.

கொழும்பு உயர் நீதிமன்றத்தால், ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் 53 மில்லியன் ரூபா அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அளுத்காமகே 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

இதே வழக்கில் முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு அரசு நிதியைப் பயன்படுத்தி கரம் பலகைகளை விநியோகித்தது தொடர்பான குற்றச்சாட்டுகளே இதற்கு காரணமாகும்.

Related posts

மேலும் 170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நிவர் சூறாவளியின் தாக்கம் குறைகிறது

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த புதிய இராணுவத் தளபதி

editor