அரசியல்உள்நாடு

IMF கூறியமைக்கேற்ப மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்கப்படுமா? சஜித் கேள்வி

IMF விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த கட்ட தவணையைப் பெற மின்சாரக் கட்டணத்தை 18% ஆல் அதிகரிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இது உண்மையா என்பதை தெரியப்படுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டணம் 18% ஆல் அதிகரிக்குமா என்பதையும், IMF இன் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் அடுத்த தவணை கிடைக்கப்பெரும் திகதி யாது என்பதையும் தெரியப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

கொள்முதல் செயல்முறையின் கீழ் மருந்துகளை கொள்வனவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளன. தயவுசெய்து இதை உடனடியாக ஆராய்ந்து பாருங்கள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் கோரிக்கை.

கொள்முதல் செயல்முறையின் கீழ் மருந்துகளை கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. முறையாக கொள்முதல் செய்ய முடியுமாக இருக்கத்தக்க மறை கரமொன்றின் நடவடிக்கை அல்லது வேறு சில காரணங்களால் இது நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட வைத்தியசாலையின் பிரதம மருத்துவர்களுக்கு கொள்முதல்செயன் முறைக்கு புறம்பாக மருந்துகளை கொள்முதல் செய்ய முடியும். எனவே இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு நான் கோரிக்கை விடுக்கிறேன்.

மேலும், கொள்முதல் செயல்முறையை வேண்டுமென்றே தடுத்து, மருந்துப் பதிவுகள் தொடர்பான சிக்கல்களை உருவாக்கி, கொள்முதல் செயல்முறைகளுக்கு புறம்பாக, விருப்பப்படி கொள்முதல் செய்யும் நடைமுறை இப்போதும் கடந்த காலங்களிலும் நடைமுறையில் இருந்து வருவதால், இது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.

கொள்முதல் செயல்முறை ஊடகவே மருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சீனி உற்பத்தி நிறுவனம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கைத்தொழில் அமைச்சரிடம் இன்று (03) எழுப்பிய கேள்விகள்

இலங்கையில் சீனி உற்பத்தி தொழில் நீண்டகாலமாக தேசிய வணிகத் தொழிலாக கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொழிலை நம்பி கிட்டத்தட்ட 250,000 குடும்பங்கள் வாழ்வாதாரம் ஈட்டுகின்றன.

தற்போதைய அரசாங்கத்தின் வரிக் கொள்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் காரணமாக தேசி சீனி உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் இந்தத் தொழில் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது.

தேசிய சீனி உற்பத்தியின் தற்போதைய நிலைமை, இறக்குமதி வரிக் கொள்கைகள் பல சிக்கல்களைக் கொண்டுள்ளது. ஆனபடியால் இது குறித்து அரசாங்கத்திடம் பின்வரும் கேள்விகளை முன்வைக்கிறேன்.

  1. இலங்கையில் தற்போது இயங்கும் லங்கா சீனி உற்பத்தி நிறுவனத்திற்குச் சொந்தமான சீனி தொழிற்சாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும் ? ஒவ்வொரு தொழிற்சாலையிலும் ஆண்டுக்கு உற்பத்தி செய்யப்படும் அளவு யாதென்பதையும் ? நாட்டின் வருடாந்த சீனித் தேவையில் இந்த உற்பத்தி எத்தனை சதவீதத்தை குறிக்கிறது என்பதையும் குறிப்பிட முடியுமா?
  2. இதன் பிரகாரம், ஆண்டுதோறும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சீனியின் அளவு யாது? இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ சீனிக்கும் விதிக்கப்படும் வரி யாது ? அது எவ்வளவு ?
  3. தேசிய ரீதியாக உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ சீனிக்கும் விதிக்கப்படும் வரி எவ்வளவு ? இறக்குமதி செய்யப்படும் சீனி VAT வரி விதிப்பில் இருந்து விடுவிக்கப்படுவதற்கும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி VAT வரி விதிப்பிற்கு உட்படுவதற்கும் ஏதுவான காரணம் யாது ?

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கு ரூ.50 அறவிடப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செலவு ரூ. 237 என்றாலும் உற்பத்தி செய்யப்படும் சீனிக்கு 18% பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் உற்பத்தி செலவு ரூ. 237 ஆக அமைந்து காணப்படுகின்றன. இது சந்தையில் ரூ.175க்கு விற்கப்படுகின்றன. இது ஒரு பெரும் நட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

  1. லங்கா சீனி நிறுவனத்துக்குச் சொந்தமான சீனி உற்பத்தி தொழிற்சாலைகள் நட்டத்தில் இயங்குகின்றன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றனதா ? இந்த தொழிற்சாலைக்கள் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக கொண்டு வர தற்சமயம் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதா ? இதற்காக அரசாங்கம் வகுத்துள்ள திட்டம் யாது ?

கிடைத்துள்ள தகவல்களின்படி, கல் ஓயா ரூ.17 பில்லியன், எதிமலே ரூ.7 பில்லியன், பெல்வத்த ரூ. 10 பில்லியன் என்ற அடிப்படையில் நட்டமடைந்துள்ளன. சேவனகல சீனி தொழிற்சாலையை மீண்டும் புனர்நிர்மாணம் செய்ய வேண்டும்.

இந்த நட்டங்கள் தொடர்பான அரசாங்க தரவுகளை சமர்ப்பிக்க முடியுமா? இந்தத் தொழிற்சாலைகளை இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கான திட்டம் யாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

  1. சீனி உற்பத்தியின் துணைப் பொருளான எத்தனோல் விற்பனையில் நட்டம் ஏற்பட காரணங்கள் யாது? இவ்வாறு நட்டம் ஏற்படுவதை குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் யாது?

இன்று ஒரு லீட்டர் ரூ.450 முதல் ரூ. 475 வரை விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் உற்பத்தி செலவு ரூ. 628- ரூ. 750 ஆக அமைந்து காணப்படுகின்றன. குறைந்தபட்ச விலை ரூ.800 ஆக அமைந்து காணப்பட வேண்டும். கடந்த ஆண்டு விற்பனை விலை ரூ.1,500 ஆக அமைந்து காணப்பட்டது. எத்தனோல் மீது கவனம் செலுத்தவில்லையாயினும், அது ஒட்டுமொத்த உற்பத்தி செயல்பாட்டில் முக்கியமானதாக அமைந்து காணப்படுகிறது.

ஊவா வெல்லஸ்ஸ மக்களின் வாழ்க்கையுடன் இது தொடர்புடையது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், சீனி இலாபத்தில் 30% வரியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எத்தனோல் இலாபத்தில் 45% வரியாக அறிவிடப்படுகின்றன. மேலும், ஒரு மெட்ரிக் டொன் மொலாசஸுக்கும் (Molases) ரூ.10,000 வரி விதிக்கப்படுகிறது. இதனால் இறுதியில் விவசாயிகளே பாதிக்கப்படுகின்றனர்.

  1. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனி மற்றும் எத்தனோல் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரிகளை நீக்குவதன் மூலம் லங்கா சீனி நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலைகள் எதிர்நோக்கும் நட்டத்தை குறைத்துக் கொள்ள முடியும் என்பதை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறதா? எதிர்காலத்தில் உள்நாட்டில் உற்ப்பத்தி செய்யப்படும் சீனி மற்றும் எத்தனோல் மீது விதிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரிகளை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா? இல்லையென்றால் ஏன் ?

Related posts

சுகாதார அமைச்சரை பதவி விலக்க ஜனாதிபதி தலையிட வேண்டும்: அஜித் பி பெரேரா

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது தொடர்பான அறிவித்தல்

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்