உள்நாடு

“IMF அனைத்திற்கும் தீர்வாகாது”- ரணில்

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவிக்கு செல்ல வேண்டியது மிகவும் அவசியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்தினால் மாத்திரம் நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க;

“..நாடு மற்ற நாடுகளின் உதவியைப் பெற அனுமதிக்கும் அடித்தளத்தை சர்வதேச நாணய நிதியம் வழங்கும்.

உலகப் போருக்குப் பிறகு, உள்நாட்டுப் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்க பல நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை நாடியுள்ளது. பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் கூட கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுள்ளது.

வெளிநாட்டு கையிருப்பு மற்றும் மாநில வருவாய் குறைந்து வருவதால், சர்வதேச நாணய நிதியத்தின் உதவி அவசியமானது, ஆனால் நீண்ட கால சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்களை செயல்படுத்துவதன் மூலம் அதை ஆதரிக்க வேண்டும்.

இதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான பல வாய்ப்புகளை அரசாங்கம் நழுவவிட்டது.

ஏற்றுமதி, நிதிக் கொள்கை மாற்றங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிற பரிந்துரைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுக்கு நிதியளிப்பதால், தற்போதைய நிர்வாகம் குறைந்தது 10 வருடங்களுக்கு பின்பற்றக்கூடிய சுருக்க கட்டமைப்பை உருவாக்குவது முக்கியமாகும்..” என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

 

  • ஆர்.ரிஷ்மா

Related posts

22வது திருச்சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை

ஜப்பானில் இருந்து புதிய வாகனங்களுடன் நாட்டை வந்தடைந்த கப்பல்

editor

G20 நாடுகள் வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை