உள்நாடு

ETI நிறுவன வைப்பாளர்களின் மனுவைப் பரிசீலிப்பதற்கான திகதி அறிவிப்பு

(UTV|கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியானது தமது வைப்புக்களை திருப்பிச் செலுத்தக் கோரி, ஈ.டி.ஐ வைப்பாளர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.

இதற்கமைய குறித்த மனுவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 25ஆம் திகதி விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக மூவரடங்கிய நீதிமன்ற குழாமினால் இன்று அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, ETI நிறுவனத்தின் செயற்பாடுகளை கைவிடுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி, மத்திய வங்கியின் நிதிசாரா நிறுவனமொன்றினால் நகர்த்தல் பத்திரமொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

editor

இலங்கையில் நடந்து வரும் விசாரணைகளில் நீதி கிடைக்கவில்லை – சஜித் பிரேமதாச

editor

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை