அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

CID க்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார

வாக்குமூலம் ஒன்று வழங்குவதற்காக முன்னாள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த பணமோசடி சட்டத்தின் கீழ் இந்த விசாரணை எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கையூட்டல், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிரான பிரஜைகள் அமைப்பின் தலைவர், நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்துள்ளார்.

மனுஷ நாணாயக்கார தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டினாரா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு முறைப்பாட்டாளர் கோரியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பிணக்குகளை உடனடியாக தீருங்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

editor

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி கைது

editor

அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் பயணம் செய்த எம்.பிக்கள்!