பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க, வாக்கு மூலமொன்றை வழங்குவதற்காக இன்றைய தினம் (21) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
அவரிடம் சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலங்களைப் பதிவு செய்யப்பட்ட பின்னர் அங்கு இருந்து வெளியேறியுள்ளார்.
ஊடகங்களுக்குத் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க, தனது சொத்துக்கள் குறித்து வாக்குமூலம் பதிவு செய்ய அழைப்பாணை வந்ததாக அவர் தெரிவித்தார்.