உள்நாடு

CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டுக்கு ‘விற்பதற்கு’ SJB கடும் எதிர்ப்பு

(UTV | கொழும்பு) – எரிபொருள் நெருக்கடி என்ற போர்வையில் அரசாங்கம் தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் முயற்சியை தாம் கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

“இன்று, நாடு முழுவதும் பெட்ரோலிய விநியோகம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. டோக்கன் முறை பயன்படுத்தப்படுவதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் கூறுகிறார். வாரந்தோறும் எண்ணெய் விநியோகம் செய்யும் முறை எண் வரிசையில் தயாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

உண்மையில் இந்த நாட்டில் ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லை. இப்போது பெட்ரோலியத்துறை அமைச்சர் அருமையான தீர்வு சொல்கிறார். இலங்கையில் எண்ணெய் விநியோகிப்பதற்கான எரிபொருள் கிடங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் கூறுகிறார்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையின் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று, நெருக்கடிக்கு மத்தியில் மீண்டும் இலங்கையின் உள்ளூர் வளங்களை விற்பனை செய்து பிரச்சினையை திசை திருப்ப அரசாங்கம் முயற்சிக்கிறது. இது ஒரு சோகமான நிலை.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தற்போது கடைப்பிடித்து வரும் உத்தியை நான் கடுமையாக எதிர்க்கிறேன். எண்ணெய், எரிவாயு மற்றும் மின்சாரம் வழங்குவது அரசாங்கத்தின் முதன்மைப் பொறுப்பாகும். அதைச் செய்யத் தவறிய அரசாங்கம் நெருக்கடியான சூழலில் நாட்டின் வளங்களை விற்று பணம் சம்பாதிக்க முயல்கிறது…”

Related posts

நேபாளத்திலிருந்து இலங்கை வந்த 93 மாணவர்கள்

ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்

editor

உப்பு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

editor