உள்நாடு

AI ஊடாக பெண்களின் படங்களை நிர்வாணமாக சித்தரித்த 20 வயதான இளைஞன் கைது

செயற்கை நுண்ணறிவைப் (Artificial Intelligence) பயன்படுத்தி இரண்டு பெண்களின் சாதாரண புகைப்படங்களை நிர்வாணப் படங்களாகத் சித்திரித்து பரப்பிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அனுராதபுரம் உப பிரிவினரால் கடந்த 29 ஆம் திகதி சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அனுராதபுரம், சாலியபுர பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளைஞன் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஜோன்ஸ்டனின் வழக்கு நவம்பர் 24இல் – மேல் நீதிமன்றம்

இலங்கைக்கான காலக்கெடு முடிவு : சர்வதேச நாடுகள் தலையீடு அவசியம்

வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடு நீடிப்பு!