2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 2362 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.
எனினும், பொதுத் தகவல் தொழில்நுட்பத் தேர்வு டிசம்பர் 6, 2025 சனிக்கிழமை நடைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
