சூடான செய்திகள் 1

க்ளைபோசெட் போராட்டத்திற்கு உயிரை விடவும் தயார்

(UTV|COLOMBO)-க்ளைபோசெட் ஒழுங்குபடுத்தலுக்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளக் கூடிய சட்ட ஆவணம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் தெரிவித்தார்.

நேற்று (05) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தில் தனது உயிரை தியாகம் செய்யவும் தயார் என்று கூறிய தேரர், பெரும்பாலும் இதன்போது தான் தனிமைப்படக் கூடும் என்றும் கூறியுள்ளார்.

அரசாங்கத்திற்கு க்ளைபோசெட் சம்பந்தமாக எதுவித கொள்கையும் இல்லை என்றும் உலகமே அவதானம் செலுத்தியுள்ள விடயம் தொடர்பில் கூடிக் கலந்துரையாட முடியாது போயுள்ளமை வருத்தமளிப்பதாகவும் கூறினார்.

இது தொடர்பில் போதிய தௌிவின்மையின் காரணமாக சமூகத்தில் இது குறித்து பேசப்படுவதில்லை என்றும், எந்தவொரு அரசியல்வாதியும் இது குறித்து பேசுவதில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ண தேரர் தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தூபியில் ஏறிப் புகைப்படம் எடுத்த மாணவர்கள் விடுதலை

7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்

சவூதி அரேபியா செல்லும் அலி சப்ரி!