சூடான செய்திகள் 1

உடவளவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் அபாய நிலை இல்லை

(UTV|COLOMBO)-உடவளவ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் எதுவித அபாய நிலைமையும் இல்லை என்று மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

 

இந்த அணைக்கட்டில் கோடுகள் கீறப்பட்டதை போன்றதொரு நிலைமை காணப்பட்டது. இதனை நேற்று நேரில் சென்று அவதானித்த பின்னர் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

அணைக்கட்டுக்களில் வெடிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து மக்கள் அநாவசியமாக அச்சப்பட தேவையில்லை. பாரிய கொங்கிறீட் அணைக்கட்டுகளில் கோடுகள் உருவாவது வழமையானது என பொறியியலாளர்கள் கூறியதாகவும் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய சுட்டிக்காட்டினார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

1.5 பில்லியன் இலாபத்தினை திறைசேரிக்கு வழங்கும் லிட்ரோ!

மலேரியா நோயின் பரவல் தீவிரம்

06வருடத்தின் பின் மரணதண்டனை வழங்கிய இளஞ்செழியன்