வகைப்படுத்தப்படாத

ஐக்கிய தேசிய கட்சியை முழு மறுசீரமைக்கும் அறிக்கை இன்று

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சியை முழு மறுசீரமைக்கும் பொருட்டான யோசனைகளைப் பெற்றுக்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தலைமையிலான இந்த குழுவில் அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, சாகல ரத்நாயக்க, அகிலவிராஜ் காரியவசம் மற்றும் அஜித் பீ பெரேரா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியை முழுமையான மறுசீரமைப்பதற்கான யோசனைகளை முன்வைக்கும் பொருட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஒருவாரத்திற்கு முன்னர் இந்த குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இராணுவ ஜெனரல் மற்றும் பாதுகாப்பு படைப் பிரதானியாக பதவி உயர்வு

புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் பூர்த்தி

எழுத்தூரில் நீர் உள்வாங்கும் நிலையம் நாளை மறுதினம் திறப்பு