வகைப்படுத்தப்படாத

மிளகாய் பொடி தூவி கோடிக் கணக்கான பணம் கொள்ளை

(UTV|NUWARA ELIYA)-நுவரெலிய நகரிலுள்ள சிகரெட் விற்பனை முகவர் நிறுவனத்தில் இருந்து, தனியார் வங்கி ஒன்றில் வைப்பிலிட லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒருகோடியே 45 இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று காலை 08.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் லொறியை மறித்துள்ளார்.

பின்னர் மிளகாய் பொடியை சாரதி மற்றும் பணத்தை கொண்டு சென்ற நிறுவன ஊழியர் மீதும் தூவி விட்டு பணப் பைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

European Parliament opens amid protest and discord

உக்ரைன் நாட்டில் பாரிய வெடிப்பு சம்பவம் ; 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்