வகைப்படுத்தப்படாத

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு

(UDHAYAM, COLOMBO) – அத்தியாவசிய பராமரிப்பு செயற்பாடுகள் காரணமாக நாளை மறுநாள் 8 மணி நேர நீர் வெட்டு காலமொன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

தெஹிவளை – கல்கிஸ்ஸ மற்றும் கொழும்பு தெற்கு பகுதிகளில் இந்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி , இரவு 9 மணி தொடக்கம் 21ம் திகதி அதிகாலை 5 மணி வரை தெஹிவளை , கல்கிஸ்ஸ , ரத்மலான , சொய்சாபுர , அத்திடிய , கடுவான , பெபிலியான , பெல்லன்தொட , நெதிமால , கலுபோவில , நுகேகொடை , கொஹுவலை , போன்ற பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

அதேபோல் , வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை உள்ளிட்ட தெற்கு கொழும்பு பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஜப்பானில் திமிங்கல வேட்டை-ஜூலை மாதம் ஆரம்பம்

எதிர்வரும் சில நாட்களுக்கு ஜனாதிபதி எந்தவொரு இந்திய விஜயத்திலும் ஈடுபடமாட்டார் – ஜனாதிபதி செயலகம்

வேலையில்லாப் பட்டதாரிகள் இன்று ஆர்ப்பாட்டம்