வகைப்படுத்தப்படாத

லக்‌ஷ்மன் யாபாவின் மகனை கைது செய்யுமாறு வௌியிடப்பட்டிருந்த பிடியாணை மீளப்பெறப்பட்டது

(UDHAYAM, COLOMBO) – வாகன விபத்தொன்று தொடர்பில் 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் தொடரப்பட்டிருந்த வழக்கிற்கு முன்னிலையாகாத காரணத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் லக்‌ஷ்மன் யாபா அபேவர்தனவின் மகன் ஓசத யாபா அபேவர்தன இன்று நீதிமன்றில் முன்னிலையானார்.

அதன்படி , அவருக்கான பிடியாணையை மீளப்பெற கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலங்கசூரிய உத்தரவிட்டுள்ளார்.

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற இந்த வாகன விபத்து தொடர்பில் கருவாத்தோட்டம் காவற்துறை வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில் , நீதிமன்றில் முன்னிலையாகாததால் நேற்று அவருக்கு இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சேதமடைந்த உட்கட்டமைப்பை விரைவாக அபிவிருத்தி செய்ய வேண்டும் – பிரதமர்

உதயங்க வீரதுங்கவை அழைத்துவர ஏழு பேர் கொண்ட குழு டுபாய் பயணம்

ஈரானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்