வகைப்படுத்தப்படாத

சுஷ்மா , ரவி சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை, இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று சந்தித்துள்ளார்.

தமது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இதையடுத்து, வெளிவிவகார அமைச்சருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பது குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க இதன்போது இணக்கம் காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

“நாங்கள் அமைத்துக் கொடுத்த வீடுகளில் சதிகாரர்களின் படங்களைக் கொளுவி எமக்கெதிராக செயல்படுகின்றார்கள்”

துருக்கியின் ஜனாதிபதியாக அர்தூகான் மீண்டும் தெரிவு

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு