உள்நாடு

பல மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இதன்போது மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி, மின்னல் ஏற்படும்போது, வீட்டினுள் இருத்தல், மரங்களுக்கு அடியில் இருக்க வேண்டாம்,

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது நெல் வயல்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிகளைத் தவிர்க்கவும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கம்பி தொலைபேசிகள் மற்றும் இணைக்கப்பட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

மரங்கள் மற்றும் மின் இணைப்புகள் விழுவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

அவசர உதவிக்கு உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.

Related posts

தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிய மனுவிற்கு திகதியிடப்பட்டது

editor

சர்வகட்சி அரசுக்கு சுதந்திர கட்சி பச்சைக்கொடி

வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை [VIDEO]