அரசியல்உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டம் – களத்திற்கு சென்ற தவிசாளர்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக போராட்டமொன்று (29) வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் பிரதேச சபை மூலம் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதை நிறுத்தக் கோரியும் அந்தப் பகுதியில் இயங்கி வரும் கோழித்தீன் தொழிற்சாலையின் துர்நாற்றம் தொடர்பாகவும் எதிர்ப்பு தெரிவித்து மஜ்மா நகர் பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டம் நடாத்திய மக்களிடம் பிரதேச சபை தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு குறித்த விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

-ஓட்டமாவடி நிருபர் எச். எம். எம். பர்ஸான்

Related posts

ஷானி உள்ளிட்டோர் விளக்கமறியலில்

மே 7 ஆம் திகதியும் பல பாடசாலைகள் மூடப்படும் – கல்வி அமைச்சு

editor

சஜித்-அனுர விவாதம்: திகதியை அறிவித்த சஜித் தரப்பு