மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் பாய்ந்து பெண் ஒருவர் இன்று இரவு (23) உயிர் இழந்துள்ளார்.
குதித்த இளம் பெண் பிரதேச இளைஞர்கள் மற்றும் பொலிசாரினால் சடலத்தை தோனி மூலம் கரைக்கு எடுத்துவரப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு பொலீசாரின் வாகனத்தில் சடலத்தை கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த இளம் பெண் தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 வயதையுடையவர் எனவும், கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும், மேலதிக விசாரனையினை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
-மட்டக்களப்பு செய்தியாளர்
