தென் கொரிய முன்னாள் பிரதமர் ஹான் டக்-சூவுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரிய நீதிமன்றம் நேற்று (21) இந்தத் தீர்ப்பை வழங்கியது.
முன்னாள் ஜனாதிபதி யூன் சுக்-யியோலுக்கு இராணுவச் சட்டத்தை அறிவித்து அதை செயற்படுத்த உதவியதற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சரவைக் குழுக்கள் மூலம் இராணுவச் சட்டத்தை சட்டபூர்வமாக்குவதற்கு உதவியதற்கும், இராணுவச் சட்ட ஆவணத்தை போலியாக உருவாக்கி அழித்ததற்கும் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
