உலகம்

ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற வீசா வழங்கலை நிறுத்திய அமெரிக்கா

ஈரான், ஈராக், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, நைஜீரியா உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற வீசா (Immigrant Visa) வழங்கலை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கை ஜனவரி 21 முதல் நடைமுறைக்கு வரும் என, அமெரிக்க வெளியுறவுத் துறை உள்குறிப்பை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தற்போதுள்ள சட்டங்களின் கீழ் விசாக்களை மறுக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான நடைமுறைகள் திரையிடல் (screening) மற்றும் சரிபார்ப்பு (vetting) நடைமுறைகளை வெளியுறவுத் துறை மீளாய்வு செய்யும் காலப்பகுதியில் இவ்வாறு வீசாக்களை மறுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வீசா இடைநிறுத்தத் திட்டங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும், இந்த முடிவுக்கான விரிவான காரணங்கள் அல்லது இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இந்த நடவடிக்கை, அமெரிக்காவின் குடியேற்ற மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் மேலும் கடுமையான அணுகுமுறை உருவாகி வருவதை சுட்டிக்காட்டுவதாக சர்வதேச அரசியல் வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ட்ரம்ப் அரசாங்கம் ஏற்கனவே குடியேற்ற விவகாரத்தில் கடுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புரூணை, தனது பயணத் தடை பட்டியலில் இலங்கையினை சேர்த்தது

எஸ்ட்ரா செனெகா கொவிட்-19 தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த அனுமதி

முகநூலில் மற்றுமொரு மாற்றம்