உள்நாடு

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்குதல் ஆரம்பம்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவைப் பெற்ற அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும்.

மேலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துத் தெரிவித்த வகையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் 25,000 ரூபா நிதி உதவி வழங்கப்படும்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

சாரதி அனுமதிப்பத்திர வைத்திய சான்றுகள் பெறும் முறையில் மாற்றம்

பெலாரஸ் நாட்டில் இலங்கையர் சடலமாக மீட்பு!

அமுலில் உள்ள ஊரடங்கு நீடிக்கப்படுமா?