உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இன்று (23) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன் முறையாக 4,485 டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று நாட்டில் தங்கத்தின் விலை சுமார் 7,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்று காலை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 325,600 ரூபாவாக அதிகரித்துள்ளது.

அதேநேரம் நேற்று 344,000 ரூபாவாகக் காணப்பட்ட 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று 352,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

டிரம்பின் வரிக் கொள்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இன்னும் தீர்வில்லை – சஜித் பிரேமதாச

editor

ஹட்டன் ஜும்ஆப் பள்ளிவாசல் பாதுகாப்பு ஊழியர் கொலை – 10 நாட்களின் பின் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்

வத்தளையில் நீர் விநியோகம் தடை